Saturday, August 25, 2012

இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தாராமாம்!

இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இரண்டு முறை ஆட்சியை இழந்தாராமாம் திரு. மு. கருணாநிதி! இதை பொது மேடையில் முழங்கி இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். நேற்று (24/08/2012) அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ விளக்க பொதுக்கூட்டத்தில்தான் இப்படி முழங்கி இருக்கிறார்கள். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே இலக்கிற்காக இலங்கை தமிழர்களுக்கு தங்களால் ஆனா அனைத்து துரோகங்களையும் செய்து விட்டு இன்று அதை மூடி மறைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் என்ன செய்வது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்களே?

ஆட்சியை இரண்டு முறை இவர்கள் இழந்தது இலங்கை தமிழருக்காக அல்ல? அது வேறு காரணங்களுக்காக என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம். திமுக ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1975 இல் ஊழல் குற்றச்சாட்டிற்காக மிசா சட்டத்தின் கீழ் அன்னை இந்திரா காந்தி அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை நம் மாநிலத்தை தொட வில்லை. பிறகு 1991 இல் சந்திர சேகர் பிரதமராக இருந்த பொது மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது இந்திய அரசு ரகசியங்களை கள்ளத்தனமாக விடுதலை புலிகளுக்கு அனுப்பிய தேச துரோக குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆக இரண்டு முறையும் நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதற்காகதான் இவர்கள் ஆட்சியை பறி கொடுத்தார்களே அன்றி, இலங்கை தமிழன் அல்ல இந்திய தமிழன் நலனுக்காக கூட ஆட்சியை பறிகொடுக்க இவர்கள் தயார் இல்லை. 

மேலும் ராஜீவ் காந்தி படுகொலையில் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி 1997 இல் அன்றைய ஐக்கிய முன்னணி சர்காரிலிருந்து திமுகவை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரசு வற்புறுத்தியும் வெளியேறாமல் அதற்காக திரு. குஜ்ரால் தலைமையிலான  ஐக்கிய முன்னணி ஆட்சியே பறி போயிற்று. ஆனால் அதே காங்கிரசுடன் 2004 இல் கூட்டணி வைத்து அவர்கள் தலைமையிலேயே ஆட்சியில் இடம் பிடித்த இவர்கள் பேசுவதெல்லாம் நமக்கு வேத வாக்கு ஆகிவிடுமா என்ன? வெறும் காமிடி பீசு தான்! 

இதில் ஹைலைட் என்ன என்றால், டெசோ தீர்மானத்தை ஐ.நா. சபைக்கு அனுப்பி ஏற்க செய்வார்களாம்! வலிமை வாய்ந்த ஜனநாயக நாடுகள் போடும் தீர்மானத்தையே ஐ.நா. சபை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி இருந்திருந்தால் என்றோ பாகிஸ்தான் நமக்கு கொடுத்து வரும் தொல்லைகள் அடங்கியிருக்கும். இந்த லட்சணத்தில் காமிடி பீசுகள் கொடுக்கும் தீர்மனத்தையா அங்கீகரிக்க போகிறார்கள். கவுண்டமணி ஸ்டைலில் "ஜப்பான்ல ஜாக்கி சான் கேட்டாங்கோ, அமெரிக்கவுல மைக்கேல் ஜாக்சன் கேட்டாங்கோ" என்று வேண்டுமானால் அறிக்கை விட்டுக்கொள்ள பயன்படுமே அன்றி ஊறுகாய் மடிக்க கூட உதவாது!