இராமாயணத்தில், விசுவாமித்திர மகாமுனிவர் இராமனையும் இலக்குவனையும் தமது வேள்வியை காக்க வேண்டி மாமன்னர் தயரதனிடமிருந்து கேட்டு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் தாடகை என்ற அரக்கர் இனத்து பெண்மணி விசுவாமித்திரரின் வேள்வியை சிதைக்கும் எண்ணத்தோடு வருகிறாள். அவளை குருவின் அணையை ஏற்று வாதம் செய்கிறார் சக்கரவர்த்தி திருமகனார். இது இராமன் இளவரசனாக இருந்த பொழுது நடந்தது. இராமனுக்கு திருமணம் நடைபெறும் முன்பு, தயரதன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்ய இருந்த பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. இங்கே இராமன் முடியிழந்தான் என்ற பேச்சே எழவில்லை.
அடுத்து தமிழை பிழைப்பாக கொண்டிருப்பவரின் கொள்கை இராமன் ஆரியன் என்பது. இராவணனும் அவனது சுற்றத்தினரும் திராவிடர்கள் என்பது. இதை விளக்கவே இராவண லீலாவை நடத்திய கூட்டத்தினர்தான் இவர்கள். இப்படியிருக்க இவர் தன்னை இராமனாக உருவகம் செய்து கொண்டிருப்பது பெரிய விந்தைதான். அதுவும் எதிரில் இருக்கும் பார்ப்பன பெண்மணியை தாடகையாக உவமை கூறியிருப்பது, தம் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தை மறைக்க கூறியிருக்கும் நயவஞ்சக சொற்கள்தான். தனக்கென்றால் இராமாயணத்தையும் அதுவும் அரைகுறையாக புரிந்துகொண்டு விளக்கம் கூறுவார். பிறருக்கேன்றால் அவர்களை கேலி கிண்டல் செய்து இரண்டு பக்க கட்டுரை வரைவார்.
No comments:
Post a Comment