Saturday, April 9, 2011

"காமிடி பண்றாங்கோ"

இந்த தமிழ்நாடு எலக்சன் நமக்கு ரொம்ப புதுசா இருக்கு. போஸ்டர் இல்ல, மைக் போட்டு காத்து கூச்சல் போடல்ல, தோரணம் கட்டி தெருவை நாரடிக்கல்ல, நம்ம வீட்டு செவுத்துல அவங்க அப்பன் வீடு மாதிரி எழுதல, இப்படி பல புதுசு. தலைவருங்க பேச்சுக் கூட புதுசா தான் இருக்கு. சாம்பிளுக்கு சிலது.

கருணாநிதி: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் உற்பத்தி பெருக்குவோம். தடையில்லா மின்சாரம் வழங்குவோம்" 
(இந்த ஐந்து வருடமும் உங்க ஆட்சி இல்லைன்னு நினைச்சிக்கிட்டிருந்தீங்களா? இல்ல இதுவரைக்கும் கொள்ளை மட்டும் அடிச்சீங்களா?)

ஸ்டாலின்: "தலைவர் கலைஞரின் திட்டங்கள் மக்களை சென்று அடைந்திருக்கின்றன" (ஆமா. நீங்கதான் வீரப்ப சொல்றீங்க. தேர்தல் ஆணையம் எங்கே அடைய விடுது? அதான் பாதி வழியிலியே பிடிச்சிடுராங்களாமே?)

அழகிரி: " தேர்தலுக்கு பிறகு அ. தி. மு. க. இருக்காது" (தேர்தல் வரையாவது நீங்க இருப்பீங்களா? அந்த கலெக்டர் என்ன இந்த பாடு படுத்துறாரே?) 

மன்மோகன் சிங்: "ஊழலை ஒழித்தே தீருவது என்று இந்த அரசு செயல்படுகிறது"  (ஐயோ பாவம். ராசா ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன் வெலத்து ஊழல், குட்ரோச்சி தப்பிச்ச ஊழல், குதிரை வியாபாரி வெளிநாட்டில் பணம் பதுக்கியது, இதெல்லாம் சரி கட்டியாச்சா? இவ்வளவு வீறாப்ப சவுண்டு விடுறாரு. இல்ல மக்கள் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறாரா? நாற்பது திருடங்களுக்கு தலைவரா இருந்துக்கிட்டு பேச்ச பாரு பேச்ச)

ஜெயலலிதா: "அரசு ஊழியர்களின் குறைகளை களைவோம். அவர்கள் நலன் பாதுகாக்கப்படும்" (ஏம்மா! ராவோட ராவா அவங்களை கைது பண்ணி புழல் சிறையில வெச்சி வாராவாரம் பிரியாணி போடபோறீங்களா?)

சோனியா காந்தி: "தமிழக அரசின் செயல் பாடுகள் சரியாக உள்ளன. அவை மக்களை சென்று அடைந்திருக்கின்றன" (உங்க வீட்டு வாசல்ல கருணாநிதி ஆறு மணிநேரம் வெயிட் பண்ணது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சின்றது உங்களுக்கும் தெரிஞ்சிபோச்சா?)

சுஷ்மா சுவராஜ்: "தமிழக மீனவர்களுக்கு பி.ஜே.பி. கேடயமாக இருக்கும்" (அவங்க மீன் பிடிக்க போறதுக்கு முன்னாடி நீங்க போவீங்களா?

ராகுல் காந்தி: "இந்த அரசின் செயல் பாடுகளை பார்த்து ஓட்டு போடுங்கள்" (நேரடியா கருணாநிதிக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லிட்டு போங்களேன். அவரு மேல அப்படி என்ன கோவம்?)

வைகோ: "தேர்தலை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க போகிறோம்" (ஏன் சார்! நீங்க ஜெயாவோட மீட்டிங் வருவதே வேடிக்கை பார்க்கிறா மாதிரி தான் இருக்கும். இது என்ன புதுசா)

சு. சுவாமி: "எங்களுக்கு ஐந்து எம்.எல். ஏ. கிடைத்தால் போதும். யாரையும் ஊழல் செய்ய விடமாட்டோம்" (நீங்களே ஊழல் செய்துக்குவீங்களா?)

ராமதாஸ்: "வன்னியர்களுக்கு நல்லது செய்யும் ஒரே தலைவர் கலைஞர்தான்" (அதனால்தான் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க கலைஞர் மருத்துட்டரோ?)

திருமாவளவன்: "தமிழினம் தலை நிமிர கலைஞரை ஆதரிப்பீர்"  (ராஜபக்சேவை சந்தித்து கை குலுக்கி ஆதரிச்ச மாதிரியா?)

இவ்வளவு நேரம் உங்களை சிரிக்க வெச்சதுக்கு எனக்கு நன்றியாவது சொல்லுங்களேன். தமிழன் நன்றி கேட்டவன்ற பேரு வேணாம். 

No comments:

Post a Comment