Saturday, August 13, 2011

இந்தி படத்துக்கெதிராக போராட்டம்

"ஆரக்ஷன்" என்று ஒரு இந்தி படம் ரிலீஸ் ஆயிருக்கு. அமிதாப் பச்சன் அதுல நடிக்கிறாரு. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனமும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறதா சொல்லி அதை சில மாநிலங்கள்ல தடை செஞ்சிட்டாங்க. சில இடத்துல ஆர்பாட்டம் பண்றாங்க. இட ஒதுக்கீட்டு பிரச்சனை ஒன்னும் விவாதத்திற்கப்பாற்பட்ட விஷயமில்லை. அதுவும் பேச்சு, எழுத்து சுதந்திரமுள்ள நாட்டில் யாரும் எதுவும் பேசலாம், செய்யலாம். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது, அவ்வளவுதான். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடப்பதை போல, எதிர்ப்பதும் சுதந்திரம்தான். அது போக கண்மூடித்தனமாக இட ஒதுக்கீடு தொடரவும் கூடாது அல்லவா! இதில் நியாயம் இல்லாமலில்லையே. உயர்ந்து விட்டவன் மென்மேலும் தன்னையே வளப்படுத்திக்கொள்ள கூடாது. தமது பிரிவில் உள்ள மெலிந்துபோன பிறருக்கு இடம் விட்டு ஒதுங்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும். இது ஒரு சாதியிலேயே பிளவை உண்டாக்கி விடும் என்பது சாதியை அடிப்படியாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களின் பயமாக இருக்கலாம். அப்படியாவது சாதி என்ற பேய் தொலையாதா என்ற எதிர்பார்ப்புத்தான் நமக்கு இருக்கிறது. சரி நியாய அநியாயங்கள் இருக்கட்டும். இங்கே நாம் சொல்லவந்த விஷயமே வேறு.

சென்னை சத்தியம் தியேட்டர் வாசலில் ஒரு கும்பல் கோஷம் போட்டிருக்கிறது. இன்னொரு கும்பல் கோவையில் ஒரு தியேட்டரில் திரையை கிழித்திருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், இவர்கள் யாருக்கும் இந்தி தெரியாது. இந்தி தெரிந்து படம் பார்க்க போனவன் எவனும் இட ஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாது. இதெல்லாம் தெரிந்தும் இவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணக் காரணம், கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில் சொல்வது போல 'எல்லாம் ஒரு விளம்பரம்' அவ்வளவே. இவர்களுக்கு தைரியமிருக்குமானால் தங்கள் தங்கள் அரசியல் மற்றும் சாதிக்கட்சி தலைவர்களை விட்டு "எங்கள் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம், நாங்கள் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டோம், அந்த இடத்தை எங்கள் சாதியிலேயே பின் தங்கிய நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம்"  என்று அறிக்கை விட வேண்டியதுதானே. 

No comments:

Post a Comment