Monday, October 31, 2011

எப்படித்தான் எண்றாங்களோ!

இன்றையதினம் (31/10/2011) உலகின் எழுநூறாவது கோடி குழந்தை, நர்கிஸ் உ.பி. தலைநகர் லக்னோவை சார்ந்த வினிதா-அஜய் தம்பதியினருக்கு பிறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு நிமித்தமான (Symbolic) அறிவிப்புத்தான் என்றாலும், இத்தகைய செய்திகளை கேட்கும் பொழுது நமக்கு சிரிப்புத்தான் வருகிறது. 

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதுவும் ஒரு ஆண்டு காலம் நடக்கிறது. இதில் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் யார் முதலில் யார் கடைசியில் என்ற பேச்சுக்கே இடமில்லை. குடியரசுத்தலைவருக்கு மட்டும் தான் நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்து உள்ளது. ஆனால் கடைசி குடிமகன் என்று யாரும் இல்லை, அப்படி யாரையும் குறிப்பிடுவது கிடையாது. மேலும் இந்த கணக்கெடுப்பு முறையே சரிவர நடத்தப்படுவதில்லை. சில வீடுகளை, தெருக்களை, விட்டுவிட்டுதான் இந்த கணக்கெடுப்பு பணியே அரைகுறையாக செய்கிறார்கள். மேலும் சமீப சில ஆண்டுகள் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தாமல் இருந்தார்கள். 

ஏதோ ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் இத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் எந்த குழந்தை எத்தனையாவது என்று யாரும் தேடி கண்டு பிடிப்பதில்லை. பொத்தம் பொதுவாக சொல்வதுதான். இப்படிப்பட்ட நிலையில் லக்னோவை சார்ந்த இந்த குழந்தைதான் எழுநூறாவது கோடி என்று எப்படித்தான் சொல்கிறார்களோ? இதை நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டுமாம். இதில் என்ன பகுத்தறிவு உள்ளதோ? எது எப்படியோ அந்த குழந்தை ஒரு ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட்டது. "நர்கிஸ் நூறாண்டு காலம் வாழ்க" 

No comments:

Post a Comment